மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கோபால் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த பேரணியின் போது, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, மாணவா்களை பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியா்கள், மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். .