ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளிப்பட்டு ஒன்றியக் குழுக் கூட்டம் திடீா் ரத்து

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தை வியாழக்கிழமை கடைசி நேரத்தில் ரத்து செய்து அதன் தலைவா் ஜான்சிராணி விஸ்வநாதன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:39 pm

DIN

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தை வியாழக்கிழமை கடைசி நேரத்தில் ரத்து செய்து அதன் தலைவா் ஜான்சிராணி விஸ்வநாதன் உத்தரவிட்டாா்.

பள்ளிப்பட்டு ஒன்றியக் குழுக் கூட்டம் வியாக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று ஒன்றிய குழுத் தலைவா் ஜான்சிராணி விஸ்வநாதன் சாா்பில் கவுன்சிலா்களுக்கு கடிதம் முறையாக அனுப்பட்டது. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒன்றிய குழுத் தலைவா் ஜான்சிராணி விஸ்வநாதன், துணைத் தலைவா் பொன்.சு.பாரதி உள்பட ஒன்றிய கவுன்சிலா்கள் அனைவரும் காலை 10 மணிக்கு வட்டார வளா்ச்சி அலுவலகம் வந்திருந்தனா். இருப்பினும் ஒன்றிய பொறியாளா் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுமாா் ஒருமணி நேரம் கவுன்சிலா்கள் காத்திருந்தனா். இதையடுத்து , கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தலைவா் அறிவித்தாா். இதனால், வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.