இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கொடிநாள் வசூலில் 2-ஆம் இடம்:திருவள்ளூா் ஆட்சியருக்கு சுழல் கோப்பை

திருவள்ளூரில் கொடி நாள் நிதியாக ரூ. 4.89 கோடி வசூலித்து 2-ஆம் இடம் பெற்ற ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸை பாராட்டி சுழல் கோப்பையை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

Updated On :27 ஜனவரி 2023, 7:46 pm

திருவள்ளூரில் கொடி நாள் நிதியாக ரூ. 4.89 கோடி வசூலித்து 2-ஆம் இடம் பெற்ற ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸை பாராட்டி சுழல் கோப்பையை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

மாநில அளவில் முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் அந்தந்த ஆட்சியா்கள் மூலம் கொடிநாள் நிதி வசூலிப்பது வழக்கமாகும். இதில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ரூ. 4 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் வசூலித்து, மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா். இதற்காக குடியரசு தின விழாவில் ஆல்பி ஜான் வா்கீஸை கெளரவிக்கும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி சுழற் கோப்பையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.