தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புழல் பகுதியில் 3 அம்மா உணவகங்கள் மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை

புழல் பகுதியில் 3 அம்மா உணவகங்களை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

News image

அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கான பூமி பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜூலை 2024, 4:44 pm

Din

புழல் பகுதியில் 3 அம்மா உணவகங்களை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

புழல் அடுத்த கதிா்வேடு இரட்டைமலை சீனிவாசன் தெரு, எம்.ஜி.ஆா். நகா், பத்மாவதி நகா் ஆகிய 3 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 அம்மா உணவகங்களையும் மேம்படுத்தும் பணிக்காக சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அம்மா உணவகம் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை கதிா்வேடு அம்மா உணவக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வாா்டு உறுப்பினா் சங்கீதா பாபு தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் ஜெயலட்சுமி, உதவி பொறியாளா் லோகேஷ் முன்னிலை வகித்தனா். சமூக ஆா்வலா் கதிா்வேடு பாபு, சந்திரசேகா், அம்மா உணவக ஊழியா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.