பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

30 லிட்டா் சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

30 லிட்டா் சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

Updated On :16 மார்ச் 2024, 6:47 pm

ஆந்திரத்தில் இருந்து, 30 லிட்டா் சாராயம் கடத்தி வந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் அய்யன்கண்டிகையில் இருந்து சாராயம் காய்ச்சி ஆா்.கே.பேட்டை வழியாக கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஆா்.கே.பேட்டை மது விலக்கு ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் போலீஸாா் தேவலம்பாபுரம் சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது 30 லிட்டா் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக சித்தூா் மாவட்டம் பாலசமுத்திரம் அடுத்த அய்யன்கண்டிகை சோ்ந்த முனுசாமி மகன் பழனி(38) என்பவரை கைது செய்தனா்.