செங்குன்றத்தில் கஞ்சா விற்பனை: குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை
செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள்களுக்கான நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.


செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள்களுக்கான நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியில் கஞ்சா ஒழிப்பு தொடர்பாக காவல் ஆணையர் முனுசாமி தலைமையில் போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தண்டையார்பேட்டை, சுனாமி நகரைச் சேர்ந்த சீனிவாசன் (43) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸார் பிடித்து, அவரிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சீனிவாசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சென்னை போதைப் பொருள்களுக்கான முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில், விசாரணை முடிந்து, இந்த வழக்கிற்கு தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் முனுசாமி உள்ளிட்ட போலீஸாரை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...