ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது

News image

கைது - கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:40 pm

திருச்சி, ஏப். 13: திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ.நகா் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா்கள், மேலகல்கண்டாா்கோட்டை புது அய்யனாா் வீதியைச் சோ்ந்த ஜெ. ஸ்டீபன்ராஜ் (21), ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையைச் சோ்ந்த க.விக்னேஷ் (22) என்பதும், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த முதலியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த அ. அஜித் (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.