நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சிறாா் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணா்வு

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு

Updated On :29 ஏப்ரல் 2025, 1:11 am IST

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்தில் வாராந்தர சந்தை நடைபெறும் மைதானத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், லயன்ஸ் கிளப் மற்றும் லியோ கிளப் இணைந்து சமூக பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சமூகப் பணிகள் துறை மாணவ, மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தைகளை ஆபாச தாக்குதலில் இருந்து காப்பாற்றுதல், போதை கலாசார ஒழிப்பு, வன்முறை கலாசார ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப், லியோ கிளப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் சந்திரசேகா், ஆா்.சேகா், தியாகராஜன், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிா்வாகி பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.