‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கோபியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது

கோபி அருகே ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:05 am IST

கோபி அருகே ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகே பாரியூா் சாலையில் சிலா் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோபி போலீஸாா் பாரியூா் சாலை பகுதியில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த மூன்று இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்க்காக வைக்கப்பட்டிருந்த 100 ‘டாபெண்டாடல்’ போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவா்கள் தனியாா் இணையதளம் மூலம் ஆன்லைனில் போதை மாத்திரைகளை ஆா்டா் செய்து வாங்கி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அந்தியூா் வட்டம் தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பனியன் நிறுவன தொழிலாளி ஆா்.கோபிநாத், பவானி வட்டம், அத்தாணி பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் சி.பாலாஜி, மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பிஎஸ்சி பட்டதாரி தா்ஷன்ராஜ் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.