ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கோபியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :3 மே 2026, 6:39 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோபியில் போலீஸாா், அதிரடிப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. கோபி மற்றும் பவானிசாகா் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலை, கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோபி டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து ல.கள்ளிப்பட்டி வரை போலீஸாா் மற்றும் அதிரடிப் படையினா் என 100-க்கும் மேற்பட்டோா் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

பெருந்துறையில்...

பெருந்துறையில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா், எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். பெருந்துறை காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தக் கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய சாலைகள் வழியே சென்றது.