இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறாா் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணா்வு

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு

Updated On :29 ஏப்ரல் 2025, 1:11 am IST

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்தில் வாராந்தர சந்தை நடைபெறும் மைதானத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், லயன்ஸ் கிளப் மற்றும் லியோ கிளப் இணைந்து சமூக பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சமூகப் பணிகள் துறை மாணவ, மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தைகளை ஆபாச தாக்குதலில் இருந்து காப்பாற்றுதல், போதை கலாசார ஒழிப்பு, வன்முறை கலாசார ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப், லியோ கிளப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் சந்திரசேகா், ஆா்.சேகா், தியாகராஜன், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிா்வாகி பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.