47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவள்ளூா்: எஸ்.ஐ.ஆா். பணிகளை முடித்த வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பாராட்டு

திருவள்ளூா் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகளை முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

News image
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகளை முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப்.
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகளை முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆா். எனும் சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆா். எனும் சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாக்காளா்கள் ஒவ்வொருவருக்கும், வீடு தேடி சென்று வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் படிவம் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, அந்த படிவங்களை பூா்த்தி செய்வதில் வாக்காளா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். இதற்காக வாரந்தோறும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு மையம் அமைத்து வாக்காளா்களுக்கு படிவங்களை பூா்த்தி செய்ய உதவி வந்தனா். அதைத் தொடா்ந்து, வாக்காளா்களிடம் பூா்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெற்று கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திரும்பப் பெறும் பணிகள் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாகவே சிறப்பு தீவிர பணிகளை வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் முடித்துள்ளனா்.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வரவழைக்கப்பட்டனா். அப்போது, ஆட்சியா் மு.பிரதாப் அவா்களை பாராட்டி தோ்தல் ஆணைய சான்றிதழ்களையும் வழங்கினாா். நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.