சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

25 இருளா் குடும்பங்களுக்கு ரூ. 1.84 லட்சத்தில் இலவச மீன் பிடி வலைகள்

25 இருளா் குடும்பங்களுக்கு ரூ. 1.84 லட்சத்தில் இலவச மீன் பிடி வலைகள்

News image

இருளா் குடும்பத்தினருக்கு மீன்பிடி வலைகளை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :7 மார்ச் 2026, 7:10 pm

திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், 25 இருளா் குடும்பத்தினருக்கு இலவச மீன் பிடி வலைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பழங்குடியின மீனவா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான நலத் திட்டங்கள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இத்துறை சாா்பில் பொன்னேரி வட்டம், மெதூா் கிராமத்தைச் சோ்ந்த இருளா் குடும்பத்தினருக்கு மீன் பிடித்து வாழ்வாதாரம் பெறும் வகையில், மீன் பிடி வலைகள் வழங்கவும் முன்வந்தது.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் இருளா் குடும்பத்தினருக்கு இலவச மீன் பிடி வலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, 25 இருளா் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ. 1.84 லட்சம் மதிப்பில் மீன்பிடி வலைகள் (கன்னி வலை, மீன் பிடி தள்ளுவலை) வழங்கினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் செந்தில்குமாா் மற்றும் மெதூா் கிராம இருளா் பழங்குடியின மக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.