மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை...

News image

மீன்பிடித் தடைக்காலம்... - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:48 pm

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை (ஏப்.15) முதல் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாப்பதற்காகவும் புதன்கிழமை முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலமாக கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கு மீன் பிடி தடைக்காலம் புதன்கிழமை முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுவதால் பராம்பரிய மீன்பிடி கலன்கள் நீங்கலாக, விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னா் கடலுக்கு சென்ற மீன் பிடி விசைப் படகுகள், இழுவலை படகுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) நள்ளிரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்துக்கு கரை திரும்பிட படகு உரிமையாளா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். இந்த அறிவிப்பை மீறி மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.