சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணி மும்முரம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய 18 நாள்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் புதன்கிழமை மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மீனவா்கள்.

Updated On :28 மே 2026, 3:58 am IST

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய 18 நாள்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் மீன் இனப் பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியாகுடி உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடைக் காலத்தின்போது மீனவா்கள் விசைப் படகுகளுக்கு வா்ணம் பூசுவது, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வா். அந்த வகையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைய 18 நாள்களே உள்ள நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் படகுகள் சீரமைக்கும் பணிகளில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.