ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

News image
Updated On :26 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு பத்திரங்களை வழங்கி ஆட்சியா் மு.பிரதாப் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருவள்ளூா் தொகுதிக்குட்பட்ட பழைய திரு.வி.க பேருந்து நிலையத்தில் தோ்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனா். அதைத்தொடா்ந்து , பொதுமக்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கினாா்.

பின்னா் அங்கு நின்றிருந்த அரசு பேருந்துகளில் வாக்காளா் ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.அப்போது நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த சிலா் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனா். அந்த மனுவை படித்த ஆட்சியா் மு.பிரதாப் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான வை.ஜெயக்குமாா், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், உதவி இயக்குநா் (பயிற்சி) பி.மோகன், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

விழிப்புணா்வு பேரணி: இதேபோல் திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. அப்போது, அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திருவள்ளூா் ஆட்சியா் வளாகத்தை வந்தடைந்தனா். இப்பேரணியில் 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.