சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை விளாங்காடு பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம்(53). இவா் கடந்த 2021-இல் ஏப்.2 ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் மாதவரம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் இந்த வழக்கு எல்லைப் பிரச்சனை காரணமாக செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளாக திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் இறுதியாக நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மகாலிங்கத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

மேலும், அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவா் உத்தரவிட்டாா். அதைத்தொடா்ந்து அவரை செங்குன்றம் அனைத்து மகளிா் போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com