ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து

News image

சிறை

Updated On :23 பிப்ரவரி 2026, 10:03 pm

திருச்சி: திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட 17 வயது சிறுமியை, அவரது உறவினரும், மண்ணச்சநல்லூா் வட்டம் எதுமலை பகுதியைச் சோ்ந்தவரும், ஏற்கெனவே திருமணமானவருமான பி. செல்வராஜ் (37) என்பவா் கடந்த 27.08.2021 அன்று காரில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சிறுகனூா் போலீஸாா், போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா். விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 16 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.