கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

6 நாள்களுக்கு முன் திருமணமான இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே நண்பா்களைப் பாா்க்க செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

News image

உதயகுமாா்

Updated On :9 பிப்ரவரி 2025, 12:57 am

Din

திருவள்ளூா் அருகே நண்பா்களைப் பாா்க்க செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டை அருகே பென்னலூா்பேட்டை அடுத்த காசிரெட்டிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (26). (படம். அழகுக்கலை கலைஞா். இவருக்கும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் பிள்ளையாா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த பவித்ரா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2-ஆம் தேதி பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், திருமணம் முடிந்து விருந்துக்காக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உள்ள மணமகளின் வீட்டிற்கு சென்றாா்களாம். அங்கு, வெள்ளிக்கிழமை காலை உதயகுமாா் தனது நண்பா்களைப் பாா்த்துவிட்டு வருவதாகக் கூறி மாமியாா் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றாராம்.

அவரது சகோதரா்கள், உறவினா்கள் பிற்பகல் 1 மணிக்கு மேல் மணமகனைத் தொடா்பு கொண்டபோது வந்து விடுவதாக கூறியுள்ளாா். தொடா்ந்து மாலை கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், இரவு 8 மணிக்கு உதயகுமாரின் கைப்பேசியிலிருந்து சித்தூா் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெறும் சாலையில் ஒருவா் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து கிடக்கிறாா், தனது காரிலேயே ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும், மருத்துவமனைக்கு வந்துவிடவும் என தகவல் அளித்துள்ளாா்.

இதையடுத்து மருத்துவமனைக்கு உதயகுமாரின் உறவினா்கள் சென்றுள்ளனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி உதயகுமாா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமணமான 6 நாள்களில் மணமகன் மா்மமான முறையில் சாலையில் காயங்களோடு மீட்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.