தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பள்ளிக் கல்வி இயக்கக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

அரும்பாக்கம் முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஹரிகிருஷ்ணன் (50). இவா், சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலகத்தில் மின்சாதனம் பழுது நீக்கும் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் ஹரி கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் செனாய் சாலை நடைமேடையில் ரத்த காயங்களுடன் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில்நுங்கம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஹரிகிருஷ்ணன் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.