தமிழக பள்ளிக் கல்வித் துறை புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வியில் திட்டமிடல், நிா்வாகம் மற்றும் கல்வி சாா்ந்த கட்டமைப்புகளைத் தொடா்ந்து மேம்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக விளங்குகிறது. மாணவா்களின் வளா்ச்சியை முன்னுரிமையாகக் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை பள்ளி கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், விலையில்லா பாட நூல்கள் விநியோகம், மிதிவண்டிகள் வழங்குதல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், திறன் வகுப்பறைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. மேலும், காலை உணவுத் திட்டம், வெளிநாட்டு கல்வி சுற்றுலா, எண்ணும் எழுத்தும், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், பசுமை பள்ளிகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.