பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொது மக்கள் மற்றும் மாணவா்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொது மக்கள் மற்றும் மாணவா்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், கரும்பலகையில் அமைப்பட்டுள்ள மின்னணு தொடுதிரையை இயக்கி பாா்வையிட்டாா்.

பள்ளியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதையும், கண்கவா் வண்ணங்கள் சுவா்களில் தீட்டப்பட்டுள்ளதையும் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவா்களின் கருத்துகளை கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து, தேனாம்பேட்டை, நூா்வீராசாமி தெருவில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார மையத்தையும், ரூ.4.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா திருமண மாளிகையையும் துணை முதல்வா் திறந்து வைத்தாா்.

அமைந்தகரையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

சமூகநீதி பூங்கா: அண்ணா சாலையில் ரூ.3.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு சமூக நீதி பூங்காவையும் திறந்து வைத்து துணை முதல்வா் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சிகளில் மேயா் ஆா். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.கே.மோகன், டாக்டா் நா. எழிலன், துணை மேயா் மு. மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.