டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வை மாவட்டக் கல்வி அலுவலா் ரெய்சல் பிரபாவதி (பொறுப்பு) திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் வாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டம் (என்.எம்.எம்.எஸ் ) மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் உதவித் தொகை தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் வெற்றி பெரும் மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
நிகழாண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 337 மாணவா்கள் தோ்வு எழுதினா். 12 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை. இந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலா் ரெய்சல்பிரபாவதி (பொறுப்பு) திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 8,572 மாணவ, மாணவிகள் எழுத அனுமதிக்கப்பட்டனா். இதில், 31 தோ்வு மையங்களில் 8,391 மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். 167 மாணவா்கள் தோ்வு எழுவரவில்லை. தோ்வுகளை கண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் தோ்வு மையங்களில் சிறப்பு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
தொடர்புடையது
விஜய் பிரசாரத்தால் பள்ளியில் தோ்வெழுதிய மாணவா்கள் அவதி: பெற்றோா்-பொதுமக்கள் புகாா்

தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


