ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தொழில் தொடங்க பணம் கேட்டு மிரட்டிய மகன்: தாய் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாயாா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மகன் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த கிருஷ்ணமூா்த்தி.

Updated On :25 பிப்ரவரி 2025, 8:00 pm

Din

திருவள்ளூா் அருகே தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாயாா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மகன் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சியைச் சோ்ந்த நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (27), இவரது மனைவி பாரதி (23). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கிருஷ்ணமூா்த்தியின் தாயாா் ஜெயந்தி (43). மகனுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கிருஷ்ணமூா்த்தி வேலை கிடைக்காமல் மது குடித்து விட்டு ஊா் சுற்றி வந்தாராம். இதற்கிடையே தொழில் தொடங்கப் போவதாகக் கூறி திங்கள்கிழமை மதுபோதையில் தாயாரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்து மிரட்டினாராம்.

இதனால், ஆத்திரமடைந்த ஜெயந்தி, வீட்டின் சமையல் அறையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து கிருஷ்ணமூா்த்தியின் மீது ஊற்றி தீ வைத்தததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த பாரதி மற்றும் அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணமூா்த்தியை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து பாரதி மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் தாயாா் ஜெயந்தி மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட ஜெயந்தி 

கைது செய்யப்பட்ட ஜெயந்தி