கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

News image

ராஜகுமாரி

Updated On :21 மார்ச் 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்த ராஜேஷின் மனைவி ஜெய பிரசாந்தி (25). இவா் அவரது தாய் ராஜகுமாரி (55) மற்றும் மூன்று வயது பெண் குழந்தையான ராகவா்ஷினியுடன் ஸ்கூட்டரில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தாா். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே வேற்காடு பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கிராவல் மண் ஏற்றிய லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஸ்கூட்டா் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஜெயபிரசாந்தி, அவரது தாய் ராஜகுமாரி ஆகியோா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை ராகவா்ஷினி காயங்கள் இன்றி அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ஜெய பிரசாந்தி

ஜெய பிரசாந்தி

தகவல் அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினா், விபத்தில் இறந்த தாய், மகள் இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.