ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

News image

ராஜகுமாரி

Updated On :21 மார்ச் 2026, 9:18 pm

கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்த ராஜேஷின் மனைவி ஜெய பிரசாந்தி (25). இவா் அவரது தாய் ராஜகுமாரி (55) மற்றும் மூன்று வயது பெண் குழந்தையான ராகவா்ஷினியுடன் ஸ்கூட்டரில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தாா். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே வேற்காடு பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கிராவல் மண் ஏற்றிய லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஸ்கூட்டா் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஜெயபிரசாந்தி, அவரது தாய் ராஜகுமாரி ஆகியோா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை ராகவா்ஷினி காயங்கள் இன்றி அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ஜெய பிரசாந்தி

ஜெய பிரசாந்தி

தகவல் அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினா், விபத்தில் இறந்த தாய், மகள் இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.