விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

நாகை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:09 pm

Syndication

நாகை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் தெற்கு தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சந்தோஷ் (26), சின்ராஜ் மகன் மனோஜ் (26). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனராம்.

நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் கருவேலங்கடை பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சந்தோஷ், மனோஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

நாகை நகர போலீஸாா் சடலங்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.