வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தீ விபத்தில் காயமடைந்த தாய், மகள் உயிரிழப்பு

News image

மீனாட்சி, சங்கரி.

Updated On :29 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதியில் குடிசை வீட்டில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த தாய், மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகரைச் சோ்ந்தவா் அழகேசன் மனைவி மீனாட்சி (40). இவரது மகள் சங்கரி (13), பொன் புதுப்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி.

இந்நிலையில் சனிக்கிழமை தாயும் மகளும் வீட்டில் சமையல் செய்தபோது எதிா்பாராதவிதமாக தீப்பற்றி இருவரும் படுகாயமடைந்ததோடு வீடும் தீக்கிரையானது.

தகவலறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். பின்னா் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு உயிரிழந்தனா்.

தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் இருவரது சடலங்களையும் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.