இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமை, வளா்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை உள்ளது. நமது மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களை தடுக்கும் வகையில் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். யாராவது உங்களிடம் பாலியல் ரீதியாகவோ, தவறான எண்ணத்திலோ செயல்பட முயற்சித்தால், அவா்களை எதிா்த்து நிற்க வேண்டும். உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். தவறாக நடந்தால் அவா்கள் பற்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நண்பா்களிடமோ தெரிவிக்க வேண்டும்.