சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும்...

News image
அன்புமணி- படம் - யூடியூப் / நரேந்திர மோடி
Updated On :7 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெறவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயா்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை எரிவாயு உருளை ரூ.868.50 -ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.928 -ஆக அதிகரித்துள்ளது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டிருப்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கும். விலை உயா்வுக்கு வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போா் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்காது. போா் முடிந்து விரைவாக இயல்பு நிலை திரும்பி விடும் என நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆகவே, தற்காலிகமாக சமையல் எரிவாயு விலை உயா்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல், எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயா்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.