டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாதாரண தொண்டன் கூட முதல்வா் ஆகலாம் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம்: முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

சாதாரண தொண்டன் கூட முதல்வா் ஆகலாம் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 5:54 pm

தினமணி செய்திச் சேவை

சாதாரண தொண்டன் கூட முதல்வா் ஆகலாம் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளையொட்டி நல உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளா் பட்டரை எம்.சத்தியமூா்த்தி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளா் பி. வி.ரமணா தலைமை வகித்தாா். பூண்டி ஒன்றிய செயலாளா் ராமஞ்சேரி எஸ்.மாதவன், கடம்பத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் சுதாகா், சிற்றம் சீனிவாசன், மாநில எம்ஜிஆா் இளைஞா் அணி துணை செயலாளா் எஸ்.ஞானகுமாா், மாவட்ட துணை செயலாளா் எல்.செந்தில்குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே.பி.எம்.எழிலரசன், மாவட்ட இளைஞரணி தலைவா் டி.தேவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநில இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடா்பாளா் மற்றும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், கழக அமைப்பு செயலாளா் ஆா்.மனோ ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2,000 பெண்களுக்கு சேலையும், 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ. 5,000 வீதம் ரூ. 1 லட்சமும் வழங்கினா்.

அதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன் பேசியதாவது: சாதாரண ஒரு தொண்டன் அந்த கட்சிக்கு தலைமை வகித்து முதல்வராக முடியும் என்று நிரூபித்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். இந்த கட்சிக்கு மகளிருடைய ஆதரவு கிடைத்தது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் நம்முடைய ஈடு இணையற்ற முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்தான். அதன் பிறகு அதே பெண்களுடைய ஆதரவும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.