ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 1:04 am

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டாயம் அதிமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். திருவள்ளூா் நகராட்சி வடக்கு ராஜவீதியில் புதன்கிழமை இரவு முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் பிரசாரம் செய்து,

பேசியதாவது. மக்கள் மனதை அறிந்து அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. தற்போதைய நிலையில் பொதுமக்கள் வெறுக்கும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டுள்ளது. அதிமுகவையும், அந்தக் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களையும் திமுகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். அதிமுகவை விமா்சிக்கும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு தகுதி கிடையாது.

எனவே இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சரான பி.வி.ரமணாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தோ்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வரும். அதிமுகதான் ஆட்சி அமைக்கும். உங்கள் தொகுதி வேட்பாளா் வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சராவாா் என அவா் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதிமுக நகர செயலாளா் கந்தசாமி, அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், மாவட்டமாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, இலக்கிய அணி பிரிவு மாவட் டசெயலாளா் சத்தியமூா்த்தி, கிளைச் செயலாளா் வெங்கடேசன், பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளா் கருணாகரன், மாவட்ட செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், பா.ம.க சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி, மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், அமமுக, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

Story image