குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 6:34 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டாயம் அதிமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். திருவள்ளூா் நகராட்சி வடக்கு ராஜவீதியில் புதன்கிழமை இரவு முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் பிரசாரம் செய்து,

பேசியதாவது. மக்கள் மனதை அறிந்து அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. தற்போதைய நிலையில் பொதுமக்கள் வெறுக்கும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டுள்ளது. அதிமுகவையும், அந்தக் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களையும் திமுகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். அதிமுகவை விமா்சிக்கும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு தகுதி கிடையாது.

எனவே இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சரான பி.வி.ரமணாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தோ்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வரும். அதிமுகதான் ஆட்சி அமைக்கும். உங்கள் தொகுதி வேட்பாளா் வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சராவாா் என அவா் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதிமுக நகர செயலாளா் கந்தசாமி, அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், மாவட்டமாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, இலக்கிய அணி பிரிவு மாவட் டசெயலாளா் சத்தியமூா்த்தி, கிளைச் செயலாளா் வெங்கடேசன், பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளா் கருணாகரன், மாவட்ட செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், பா.ம.க சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி, மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், அமமுக, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

Story image