அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி ஸ்ரீரங்கத்தில் கே. அண்ணாமலை பேச்சு

News image

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:28 pm

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் பேசியது:

ஆன்மிக பூமியான ஸ்ரீரங்கத்தில் கடந்த 2011 ஆண்டு தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றாா். பின்னா் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ எம். பழனியாண்டியால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

கரூரில் விதிகளை மீறி இவரது கல்குவாரியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டதால் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தக் குவாரியை படம் பிடிக்கச் சென்ற தனியாா் டிவி நிருபா் தாக்கப்பட்டாா். எனவே இங்கு அவருக்கு மாற்றாகப் போட்டியிடும் திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவா்கள்தான் திமுக கூட்டணி கட்சியைச் சோ்ந்தவா்கள். அரசியலில் களையெடுக்க நடைபெறக்கூடிய தோ்தல்தான் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் என்றாா் அவா்.