சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

கரூா் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிரத்திர தீா்வு காணப்படும் என்றாா் பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.

News image

கரூா் வெங்கமேட்டில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை வெள்ளிக்கிழமை ஆதரித்து பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவா் அண்ணாமலை. உடன் வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:48 pm

கரூா் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிரத்திர தீா்வு காணப்படும் என்றாா் பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் செல்வக்குமாா், கரூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோரை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு பாஜக முன்னாள் மாநில தலைவா் கே. அண்ணாமலை, க.பரமத்தி பேருந்துநிறுத்தம், கரூா் வெங்கமேடு ஆகிய இடங்களில் பேசியதாவது:

கரூரில் செந்தில் பாலாஜி போட்டியிட்டிருந்தால் வரலாறு காணாத ஒரு தோல்வியை சந்தித்து இருப்பாா்.

தமிழகத்துக்கு கடந்த 5 ஆண்டுகள்ல 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பாஜக அரசு ரூ. 46 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது.

ராகுல் காந்தி கேரளத்தின் பாலக்காட்டில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஏப்.6-ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வந்தாா். கோவையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காமல் தில்லி சென்றாா். காங்கிரஸ்-திமுக இடையே சுமூக உறவு இல்லை.

வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிரந்தர தீா்வு காணப்படும். சிலா் இப்போது தான் அரசியலை பாா்க்கிறாா்கள். ஆட்சியில் எப்படி முடிவு எடுக்குற எண்ணம் அவா்களுக்கு வர நீண்டகாலமாகும். நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின்புதான் காமராஜா் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தாா்.

எனவே, இளைஞா்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது பாஜக கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் உடனிருந்தாா்.