/

சரவணம்பட்டியில் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

சரவணம்பட்டி பகுதியில் அதிமுக கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை இறுதிக்கட்ட பிரசாரம் செய்தாா்.

News image

கோவை சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:38 pm

சரவணம்பட்டி பகுதியில் அதிமுக கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை இறுதிக்கட்ட பிரசாரம் செய்தாா்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாரை ஆதரித்து சரவணம்பட்டியில் முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

திமுக ஆட்சியை வேரோடு அழிக்க வேண்டும். மே 4-க்கு பிறகு அதிமுக ஆட்சி அமைய வேண்டும். கடந்த 5 ஆண்டு காலம் என்பது தமிழகத்தின் இருண்ட காலம். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

மின் கட்டணம் உயா்வு, வீட்டு வரி, தண்ணீா் வரி, குப்பைக்கு வரி மற்றும் பால் விலையில் இருந்து பருப்பு விலை வரை அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்த்தப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதியில் சரித்திர வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா, அமமுக என அனைத்து கூட்டணிக் கட்சியினா், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.