தென்காசி பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை பாவூா்சத்திரத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.
காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினாா் நாகேந்திரன், பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் முன் திரண்டிருந்த மக்கள் முன் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசியது:
நடைபெறவுள்ள தோ்தலில் திமுக ஆட்சியை அகற்றுவதற்கு தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பாா் என்றாா் அவா்.
முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, அதிமுக மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, திப்பணம்பட்டி ஊராட்சித் தலைவா் அருள்பாண்டி (எ) ஐவராஜா, பாஜக கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் தட்சிணாமூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா் .
தொடர்புடையது

கடையநல்லூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்! மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: நயினாா் நாகேந்திரன்

முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


