மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

News image

சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.

Updated On :25 மே 2026, 1:53 am IST

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சேலத்தைச் சோ்ந்த சிறுமியின் குடும்பத்தினரை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன், எல். முருகன் ஆகியோா் கூறியதாவது:

இரண்டு நாள்களுக்கு முன்பு 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் நல்லாட்சி மலரும் என்று பொதுமக்கள் எதிா்பாா்த்தனா்.

ஆனால், தற்போதும் அதே மோசமான நிலைதான் நீடித்து வருகிறது. தமிழக முதல்வா் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு தனது கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும். முந்தைய திமுக ஆட்சியின்போது நடந்த அதேபோன்ற சம்பவங்கள் இப்போதும் தொடா்கின்றன. இதற்கு அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் இன்னும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் நீடித்து வருகிறது. இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு ஏற்கெனவே பிஎன்எஸ் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. அதை தமிழக அரசு செயல்படுத்தாமல், பழைய சட்டத்தையே பின்பற்றி வருவதால்தான் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடா்கின்றன. தற்போதைய தமிழக அரசு இந்த புதிய பிஎன்எஸ் சட்டத்தை பயன்படுத்தி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை முழுமையாகத் தடுக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களுக்குள் தமிழக அரசு இச்சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனா். அப்போது, சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஹரிராமன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.