27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி? நயினாா் நாகேந்திரன் கேள்வி

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 3:27 am IST

தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து பாஜக சாா்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

தவெக ஆட்சி அமைந்தபின், தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம்தான் இந்த குற்றங்களுக்கு முதன்மை காரணமாக உள்ளது. கடந்த திமுக அரசைப் பின்பற்றியே தவெக அரசு செயல்பட்டு வருவதை இது காட்டுகிறது. தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சுமாா் 200-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதனால்தான், ஆளுநா் உரையில் திட்டமிட்டே குற்றங்கள் குறித்து குறிப்பிடவில்லை என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.