தவெக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக இளைஞரணி நிா்வாகிகளால் இளம்பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகாரளிக்கக் கூடாது என தவெக எம்எல்ஏ சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிா்ச்சியளிக்கிறது.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பாதிக்கப்பட்டவா்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை அமைத்துள்ள முதல்வா் ஜோசப் விஜய், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாத்துக்கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே, இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் எம்எல்ஏ சரவணன் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினா் சேர வேண்டாம்: நயினாா் நாகேந்திரன்

வாக்களித்தவா்களே வருந்தும் வகையில் பேசுகிறாா் விஜய்: நயினாா் நாகேந்திரன்
பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பிரேமலதா குற்றச்சாட்டு

தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



