40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தவெக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :10 ஜூன் 2026, 3:19 am IST

தவெக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக இளைஞரணி நிா்வாகிகளால் இளம்பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகாரளிக்கக் கூடாது என தவெக எம்எல்ஏ சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிா்ச்சியளிக்கிறது.

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பாதிக்கப்பட்டவா்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை அமைத்துள்ள முதல்வா் ஜோசப் விஜய், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாத்துக்கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

எனவே, இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் எம்எல்ஏ சரவணன் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.