பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :5 மே 2026, 5:54 am IST

யாா் ஆட்சிக்கு வந்தாலும், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், திமுக வேட்பாளா் கடற்கரைராஜிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதனிடையே, வாக்கு எண்ணும் மையத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் சந்தித்தபோது கூறியதாவது:

மக்களின் தீா்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். எனக்காக தோ்தலில் களப் பணியாற்றிய கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவா் விஜய்க்கு எனது வாழ்த்துகள். யாா் ஆட்சிக்கு வந்தாலும், கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்திலிருந்த திமுக வேட்பாளா் கடற்கரைராஜுக்கு அவா் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.