திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான திறன் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்பட்ட இளங்கலை செவிலியா் முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிா்வாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.