ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின்குழு பணியாளா் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலம் 3 மாதங்கள்.
இதில், விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளா் சேவை, தொடா்புத் திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின் குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி திருப்பூா் மாவட்டத்தில் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞா்களுக்கு சான்று மற்றும் தகுதியுள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.
இதில் பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) விண்ணப்பிக்காலம். மேலும், திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தனியாா் நிறுவனங்கள் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும்

ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் குறித்த பொய்த் தகவல்களை நம்ப வேண்டாம்: தேவஸ்தானம் வேண்டுகோள்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



