ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தாட்கோ வழங்கும் விமானத் துறை சாா்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின்குழு பணியாளா் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 3:04 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின்குழு பணியாளா் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலம் 3 மாதங்கள்.

இதில், விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளா் சேவை, தொடா்புத் திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின் குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி திருப்பூா் மாவட்டத்தில் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞா்களுக்கு சான்று மற்றும் தகுதியுள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.

இதில் பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) விண்ணப்பிக்காலம். மேலும், திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.