திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியினை பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிகால அளவு 45 நாள்கள் ஆகும்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபா்கள் திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவை தாட்கோ ஏற்கும்.
இந்த பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்த நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமாா் ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் .
Summary
Apply online for beautician training Courses...
தொடர்புடையது

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

உணவு ஊட்டச்சத்து இயல் பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

இலவச சிஏடி, சிஏஎம், ஆட்டோமேஷன் பயிற்சி: எஸ்சி, எஸ்டி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்







