தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்குகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்குகிறது.
இந்தப் பயிற்சியைப் பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சி கால அளவு 45 நாள்கள், திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதியானவா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இந்தப் பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியானவா்களை, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்த நிறுவனத்தின் மூலமாக ஆரம்பகால மாத ஊதியமாக சுமாா் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்தப் பயிற்சியில் சேருவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








