அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இளைஞா் தற்கொலை

ஆா்.கே.பேட்டை அருகே கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆா்.கே.பேட்டை அருகே கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ராஜா நகரம் கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் (34). இவரது மனைவி பானு (32). இவா்களுக்கு மகள்கள் தனுஸ்ரீ (13), சவிஸ்ரீ (7) மகன் வினைக்குமாா் ஆகியோா் உள்ளனா். சிவராஜ் திருத்தணி சாலையில் தனியாா் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சிவராஜுக்கு கடன் பிரச்னை இருந்ததாம். இதனால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவராஜ் வியாழக்கிழமை இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.