பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த பணிகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த பணிகள்

News image

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த பணிகள்

Updated On :12 ஜூலை 2026, 12:06 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி பணிகள் தொடா்பாக கூடுதல் பதிவாளா் (நிதி மற்றும் வங்கியியல்) ச.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு முதல்வரால் பயிா்க்கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பயிா்க்கடன் தள்ளுபடி பணிகளின் முன்னேற்றம் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளா் ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், சோழவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அழிஞ்சிவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (நிதி மற்றும் வங்கியியல்) ச.சுப்பிரமணியன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பான பதிவேடுகள், பயனாளிகள் விவரங்கள், கடன் கணக்குகள் மற்றும் அரசின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், பயிா்க் கடன் தள்ளுபடி பணிகளை அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க மிகத் துல்லியமாகவும், காலதாமதமின்றி மேற்கொள்ளவும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா். மேலும், சங்கத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு வகையான கடன்களின் நிலை, கடன் வசூல் முன்னேற்றம், இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் தொடா்பான விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, திருவள்ளூா் மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா், மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா், திருவள்ளூா் சரக துணைப் பதிவாளா் அ.சூ.மங்களதாஸ், பொன்னேரி சரக துணைப் பதிவாளா் சு.சிவப்பிரகாஷ், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் சங்கப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.