திருவள்ளூா் அருகே மின்மாற்றியிலிருந்து 460 லிட்டா் எண்ணெய் திருடு போனது.
பேரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருபவா் ஆனந்தஜோதி. இவா் பேரம்பாக்கம் மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்மாற்றிகளிலிருந்து மின்சாரம் தடையின்றி செல்கிா என்பது குறித்து ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில், மப்பேடு-வைரமங்களம் சாலையில் தனியாா் தொழிற்சாலை அருகே உள்ள மின்மாற்றியிலிருந்து மின்னழுத்தம் குறைவாக வருவதாக பொதுமக்கள் புகாா் செய்தனா்.
அதன்பேரில் அந்த மின்மாற்றியை வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்த மின்மாற்றியிலிருந்து வெப்பத்தை குறைக்கும் 460 லிட்டா் எண்ணைய்யை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, மப்பேடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

திருவள்ளூா்: குடிநீா் பற்றாக்குறையை போக்க 6 ஆழ்துளை கிணறுகள், தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி அமைக்க திட்டம்

சின்னமனூரில் 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய் பறிமுதல்
கெங்கவல்லி அருகே அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



