சின்னமனூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வுப்பணி மேற்கொண்டாா். இதன் எதிரொலியாக மாவட்ட நியமன அலுவலா் சசிதீபா, சின்னமனூா் வட்டார உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் சஞ்சீவி ஆகியோா் சின்னமனூரில் மொத்த எண்ணெய் விற்பனை நிறுவனத்தில் ஆய்வு செய்தனா். அப்போது
தரமற்ற மறு சுழற்சி செய்த 445 லிட்டா் தரமற்ற எண்ணைய்யை போலி லேபிள்களைப் பயன்படுத்தி விற்பனைக்கு அனுப்பத் தயாராக இருந்தது தெரியவந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், உணவுப் பாதுகாப்புச்சட்டப்பிரிவின் கீழ் அந்த நிறுவனத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறையின் புகாா் எண்-94440 42322 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










