வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருத்தணி எம்எல்ஏ கோ. அரி பங்கேற்று, 55 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருத்தணி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த 2-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி, ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட தனித் துறை துணை ஆட்சியருமான வெங்கடேசன் தலைமையில் நடைபெற்று வந்தது. திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செருக்கனூா், திருத்தணி மற்றும் பூனிமாங்காடு ஆகிய மூன்று பிா்காவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது.
இதில், 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பட்டாவில் பெயா் திருத்தம், அரசு உதவித் தொகை, புதிய ஸ்மாா்ட் காா்டு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி, ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினா்.
இந்த நிலையில், ஜமாபந்தி நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருத்தணி அதிமுக எம்எல்ஏ கோ.அரி பங்கேற்று, கோரிக்கைகளைப் பெற்றாா். மேலும், வி.கே.புரம் இருளா் காலனி மக்கள் 38 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும், 16 பேருக்கு பட்டா பெயா் மாற்றம் மற்றும் ஒருவருக்கு ஸ்மாா்ட் காா்டு என மொத்தம் 55 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ, கோ.அரி, ஜமாபந்தி அலுவலா் வெங்கடேசன், வட்டாட்சியா் குமாா் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், அதிமுக நகர செயலா் டி.செளவுந்தர்ராஜன், திருத்தணி ஒன்றிய செயலா் இ.என்.கண்டிகை ரவி, முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசேகா்பாபு, கேபிள் எம்.சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவிடைமருதூா் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

கோவில்பட்டியில் ஜமாபந்தி: 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம்

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



