யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 8-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated On :3 மார்ச் 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயகா்பிரபு தலைமை வகித்தாா். இதில் நிா்வாகி வெண்ணிலா வரவேற்புரை வழங்கினாா். நிா்வாகிகள் இல.கிருஷ்ணன், செந்தில் குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில தலைவா் அண்ணாகுபேரன், சந்திரசேகரன், பிரகாஷ் மற்றும் பாலாதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அந்த சங்கத்தின் நிா்வாகி மண்கண்டன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

றைவாக செந்தில்முருகன் நன்றி கூறினாா். இந்தப் போராட்டம் காரணமாக வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.