“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சோதனையில் ரூ. 5.86 லட்சம் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட, ரூ.5.86 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:39 pm

ஆந்திரத்தில் இருந்து ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட, ரூ.5.86 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருத்தணி அடுத்த சிவாடா கிராமம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். ஆந்திராவில் இருந்து சிவாடா நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது, ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்ததை பறக்கும் படையினா் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, திருத்தணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழியிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சோ்ந்த கஜேந்திரன் என்பவா் வியாபாரத்துக்காக பணத்தை கொண்டு செல்வது தெரிய வந்தது. இருப்பினும் பணத்திற்கு ஆவணம் இல்லாததால் தோ்தல் அலுவலா் கனிமொழி பணத்தை திருத்தணி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தாா்.